
மேற்கு இமயமலைப் பகுதிகளிலும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆசியா பகுதிகளிலும் தைம் பயிரிடப்படுகிறது. பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் ஒரு சாதாரணமான தோட்டப் பயிர். பழுப்பு சேர்ந்த பச்சை நிற இலைகள் உலர்ந்ததும் சுருண்டிருக்கும். இலைகள் முழுமையாகவும், அரைத்த பொடியாகவும் விற்பனையாகிறது.
காரமான, துடிப்பான மணமும், இனிப்புச் சுவையும் கொண்டது தைம் தைலம் மருத்துவ தன்மைகள் கொண்டவை. நரம்பு தளர்ச்சி மற்றும் ஹிஸ்டீரியாவிற்கு குணம் தரும். நஞ்சுக்கு மாற்று மருந்தாகும். புழுக்களைக் கொல்லும் ஆற்றல் இதற்கு உண்டு. நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி முதலிய நிலைகளில் சிகிச்சைக்கு உதவும்.
பித்தநீரையும், இரத்தத்தையும் இளக்கும். சிறுநீரகம், கண் முதலியவற்றின் சிகிச்சைக்கும், இரத்தத்தை சுத்தி செய்வதற்கும் பயன்படும். விதைகள் குடற்பூச்சிகளைக் கொல்லும். சரும வீக்கம் மற்றும் சரும நோய்களின் சிகிச்சையிலும் உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக