
நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
ஸ்பெயின், துருக்கி, சிரியா, ஈரான் நாடுகளிலும் விளைகிறது. வெண் திட்டுகள், வெண்குட்டம் கண்ட இடத்தில் பூசி ஊற வைத்துக் குளித்து வர வெண்மை மாறி வரும். அதிமதுரத்தை தொடர்ந்தும், அதிகமாகவும் உண்ண உடல் எடை கூடும்.
இது ஆற்றங்கரைகளில் வளரும். வெளிநாட்டுக் குண்டுமணிச் செடியின் வேருக்கு அதிமதுரம் எனப் பெயர். ரஷ்யாவிலும், சீனாவிலும் இது விளைகிறது. 24 அடி உயரம் வரை உயர்ந்து வளரும் செடி அதிமதுரம், வேர் வெட்ட வெட்ட அழியாது. பல வருடங்கள் கழித்தும் வெட்டிய வேர் துளிர்க்கும். பல நோய்களை அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அதிமதுரம் இனிப்பு சுவையுள்ள வேர். ஸ்பெயினில் நன்கு வளரும்.
சுருட்டுப் பருமனில் ஏறத்தாழ அதே நீளத்தில் குச்சி, குச்சியாக சிவப்புச் சாயலுடன் அதிமதுரம் இருக்கும். இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை. கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.
தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம். அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
அதிமதுரம் என்றால் அதிக இனிப்புள்ளது என்று பொருள். இதன் வேர்ப்பகுதி தான் அதிமதுரம். இதை வடமொழியில் யஷ்டிமது என்றழைப்பர். இது இமயமலை அடிவாரத்தில் ஏராளமாக வளர்கிறது.
பண்டைய காலத்தில் எகிப்து, சீனம், கிரேக்கம் போன்ற நாடுகளில் புகையிலைகளுடன் அதிமதுரம் சேர்த்து புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் புகையினால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்பட்டது. அதிமதுரத்திலிருந்து எடுக்கப்படும் சத்தானது கரும்பின் சர்க்கரையை விட ஐந்து மடங்கு இனிப்பு கொண்டதாகும்.
அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக