
நீலி என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது. அவுரி எங்கும் கிடைக்கும் செடியினம். குறிப்பாக இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் பயிராகும் செடி. ‘வண்ணான் அவுரி’ என்ற பெயரும் உண்டு. இதன் இலைரசம் நீல நிறம் கொண்டது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விளைநிலங்களுக்கு பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது. விஷத் தாவரங்களினால் ஏற்படும் விஷங்களைப் போக்கி விடும் என்பதால் நிலத்துக்கும், பயிருக்கும், மனிதர்களுக்கும் மிகுந்த பயனளிக்கிறது.
முடி வளர் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், கூட்டணியில் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி மூலிகையாகும். அவுரியானது ஆரோக்கியம் கொடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது.
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
——–
ஸேஜ் (Sage)
புதினா குடும்பத்தைச் சேர்ந்த உறுதியான புதர்ச் செடி, ஸேஜில் உள்ள சத்து எண்ணெய்க்காக ஜம்முவில் பயிரிடுகிறார்கள். இலைகள் நறுமணம் கொண்டவை. வாடை அழுத்தமாகவும், துவர்ப்பாகவும், கசப்பாகவும் இருக்கும்.
கோழி மாமிசம், மசால், இறைச்சி போன்ற உணவுப் பண்டங்களுக்கு ஸேஜ் பெருமளவில் பயன்படும் பூண்டுச் செடிகளில் ஒன்று. உலர்ந்த இலைகள் மூலிகையாகப் பயன்படுகின்றன. பற்பொடி, கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
அழகுக்கூடும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக