
இலங்கையைச் சேர்ந்த கடலிலும், நம் நாட்டுக் கடலிலும் விளைகிற ஒருவகைப் பூண்டு. இதைக் காயவைத்து எடுத்து மருந்தாக உபயோகிக்கலாம்.
பச்சையம் அதிகம் செறிந்த இந்தப் பவுடர் சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதம், பொலிமை, இளமை அளிக்கக் கூடியது.
கடற்பாசி பவுடருடன் சிறிது கருவாப்பட்டை சேர்த்துக் காய்ச்சி, கூழ்ப்பதமாக எடுத்து ஆறவைத்து, சிறிது சர்க்கரையும், திராட்சை ரசமும் சேர்த்து உள்ளுக்குக் கொடுத்துவர, நோயுற்றிளைத்தவர்கள் மிகுந்த உடல் வலிமையும், ஊக்கமும் பெறுவார்கள்.
ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மின் கதிர் வீச்சால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை முறியடிக்க வல்லது. உள்மருந்தாகவும், உபயோகப்படுத்தப்படுகிறது.
சிறிது ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பால் பவுடருடன் கலந்து முகத்திற்குத் தேய்த்துக் கழுவ, தொய்வடைந்த சருமம் வலுப்பெறும். வயோதிகத் தோற்றம் மாறும். சருமம் சமச்சீரான நீர்ச்சத்தினைப் பெற்று அழகுடன் விளங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக