வியாழன், 22 ஏப்ரல், 2010

மாசிக்காய் -Nutmeg


‘மேஜிக் நட்’ என்று இதற்கு மறுபெயர். ஜாதிக்காய் பருமன் மாசிக்காய் இருக்கும். ஒரு சிறு துவாரம் இதில் இருப்பதுண்டு. துவாரம் விழுந்தக் காய் மருத்துவ குணம் அதிகம் பெற்றது என்று கூறுவர் வைத்தியர். நீல நிறத்தில் சாம்பல் நிறம் (கிரே கலர்) கலந்து கொட்டை காட்சியளிக்கும். உடைத்து உட்பகுதியைப் பார்த்தால் வெண்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நுண் தூளாக்குவது எளிது. எல்லா மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்பகுதி மக்கள் வாய்ப்புண்ணிற்கு இதை வாயில் அடக்கி வைத்துக் கொள்வர். மேல்நாட்டு மருத்துவத்திலும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

நல்ல துவர்ப்புச் சுவையுடையது. இதனால் வாய், தொண்டை, உதடு, பல்லீறு, பெண், ஆண்களின் மெல்லிய சதைகளில் ஏற்படும் புண், மூலிகை விஷங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் கண்டிக்கும். சிறுநீரை எளிதாக வெளியேறும் படி செய்யும். மாசிக்காய் தூளை நீர் அல்லது பாலில் குழைத்து தலை மயிரில் தடவி ஊற வைத்துக் குளிக்க மயிர் கருமை நிறமடையும்.

மாசிக்காய்த் தூளை வினீகருடன் கலந்து தேமல், படைகளுக்குப் பூசி ஊறவைத்துக் குளிக்க நிவாரணம் கிட்டும். மாசிக்காயை எரித்து எடுத்த சாம்பலை இரத்தக் கசிவுள்ள புண்களில் தூவக் கசிவு குறையும். உடலில் தூவி குளிக்க வியர்வை நாற்றம் மட்டுப்படும். பிறப்புறுப்பைக் கழுவும் கஷாயமாக வெள்ளைப்படுதல் சிரமத்தைப் பெண்களுக்குக் குறைக்கும். பல்வலி மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.

அழகுக்கூடும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக