வியாழன், 22 ஏப்ரல், 2010

பாதாம் பருப்பு-Almonds


அனைவரும் அறிந்த அழகு சாதனப் பொருள். பெரிய பழவகையைச் சேர்ந்தது. இதன் கொட்டைகளிலுள்ள பருப்புகள் புரதசத்து மிகுந்தது. நினைவாற்றலை வளர்க்கக் கூடியது. இளைய தலைமுறையினருக்கு உடல், உள்ள வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணை புரியக்கூடியது. உடலுக்கு முக்கிய தேவைகளான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிரம்பப் பெற்றது.

கேசம் மற்றும் சரும பராமரிப்பிற்கு உறுதுணை செய்யக்கூடிய துத்தநாகச் சத்தும், சருமத்திற்கு வனப்பும், இளமைத் தன்மையும், புற்று நோயை எதிர்த்து கிருமிகளை நாசம் செய்யக் கூடிய வைட்டமின் ‘இ’ சத்தும், எலும்பின் உறுதிக்கு தேவையான கால்சியம் மற்றும் தசைகளின் சக்திக்குத் தேவையான மக்னீஷியமும் பாதாம் பருப்பில் செறிந்து காணப்படுகிறது. இதிலுள்ள புரதம் உடலில் தங்கி பக்க விளைவுகளை உண்டாக்காது. உடலுக்கு சக்தியையும் வலுவையும் மட்டுமே சேர்க்கக் கூடிய தன்மையுடையது.

சரும நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கவல்ல ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள்’ உள்ளன. இதிலுள்ள புரதசத்து சமைத்த இறைச்சிக்கு சமமானவை. எனவே இவை அழகுக்கும், நோயில்லா ஆரோக்கிய வாழ்விற்கும், உத்திரவாதமானவை. சருமத்தை சுத்தம் செய்யும் மிருதுத் தன்மை அளிப்பதால் சருமப் பராமரிப்பிற்கான பொருட் தயாரிப்பின் சேர்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமப் பராமரிப்பின் தலையாய ‘அரோமா’ எண்ணெய் ஆகும்.

சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தையும், குறிப்பாக கண்ணின் கருவளையததிற்கும் பயனளிக்கும். சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் “ப்ளீச்” தன்மை இருப்பதால் கண்ணின் கருவளையம் எளிதில் மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக