
நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம். இதன் தானியம் ஓட்ஸ். காய்ந்த தானிய விதையான ஓட்சில் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ‘பி’யும், தாது உப்புக்கள், பொட்டாசியம், பாஸ்பரசும் உள்ளன.
பண்டைய காலங்களில் ஆங்கிலேயர்களால் குதிரைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின் தாதுக்களால் கால்நடைகள் மிகவும் வனப்பாக வளர்க்கப்பட்டன.
இத்தானியத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரண உறுப்புகள் இயங்கவும், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இருதயத்திற்கும், எலும்புகளுக்கு உறுதியையும் கொடுக்கும் தன்மை இருப்பதால் நாளடைவில் இது மனிதர்களின் அன்றாட உணவிலும், அழகு சாதனத் தயாரிப்பிலும் பங்கு வகிக்கலாயிற்று.
வைட்டமின் ‘இ’ மற்றும் ‘பி’ காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீஷியம் போன்ற தாது உப்புகளும், தமனிகளின் சுவர்களை வலுப்படுத்தும் சிலிக்கான் என்னும் தாதும் நிறைந்து காணப்படும் தானியமாகும்.
வைட்டமின் ‘இ’ சத்து சருமத்திற்கு அதிகப்படியான ஊட்டச்சத்தையும், நீர்மத்தையும் அளிக்கிறது. சருமத்திலுள்ள வேண்டாத கழிவுகளை வெளியேற்றுகிறது. ஒவ்வாமை அதிகமான சருமத்திற்கு இத்தானியச் சேர்க்கையில் தயாரிக்கப்படும் அழகுப் பொருட்கள் ஒத்துப் போகின்றன.
ஜீரணத்திற்கு சிரமம் தராது. நோயாளிக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய உணவு மருந்தாக ஓட்ஸ் உள்ளது. குளிர்ப்பகுதியில் விளையும் தானியமான ஓட்ஸில் பல பிரிவுகள் உள்ளன. நரம்பு மண்டலத்திற்கு நன்மை செய்கிறது. இரத்தம், மயிர், நகம், பற்கள் போன்றவை இதில் உள்ள சத்துக்களால் பயன் அடைகின்றன.
இருதயத்திற்கு ஓட்ஸ் லேசான பலமூட்டியாக உள்ளது. கொலஸ்டிராலை கட்டுப்படுத்துகிறது. மூளைக்கும், நரம்புக்கும் ஊட்டம் தருவதால் நல்ல தூக்கம் தரக்கூடியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக