வியாழன், 22 ஏப்ரல், 2010

சோம்பு-Anise seeds


நறுமணங் கொண்ட சிறிய பூண்டுச் செடி இது. இதன் உலர்ந்த பழங்களே சோம்பு. நறுமணமும், இனிப்புச் சுவையும் கொண்டது. வட இந்தியாவில் குளிர்காலப் பயிராகவும், தென்னிந்தியாவில் மலைப் பிரதேசங்களிலும் வளருகின்றன.

சோம்புத் தைலம் நிறமற்றதாக அல்லது வெளுத்த மஞ்சள் நிறமாக நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். இலைகள் சமையலுக்கு மணமும், வனப்பும் தருவதற்கு உதவுகின்றன. இலைகள் சிறுநீர் பெருக்கும் தன்மையுடையவை. சிறுநீரக நோய்களின் சிகிச்சையில் உதவுகின்றன. சமையலுக்கு குறிப்பாக இறைச்சி வகைகளுக்கு மணம் கூட்டுகிறது.

வாயுவை அகற்றவும், தாய்ப்பால் சுரக்கவும், வியர்வை பெருக்கவும் நாட்டு மருந்துடன் உபயோகிக்கப்படுகிறது. சோப்புகளுக்கு வாசனை கூட்ட உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக