யு.டி.ஆர்.எஸ். முறையின் மூலம் ஒரு வீரருக்கு நடுவர் தீர்ப்பு வழங்கிய பிறகு, அதில் சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட வீரர், கள நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மூன்றாவது நடுவரிடம் கோரலாம். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தால், அதன்பிறகு இரு அணிளுக்கும் தலா ஒரு ஓவர் (சூப்பர் ஓவர்) வழங்கப்படும். அதில் வெற்றிபெறும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். யு.டி.ஆர்.எஸ். முறை, சூப்பர் ஓவர் முடிவு ஆகியவற்றை வரவேற்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். யு.டி.ஆர்.எஸ். முறை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அதுவும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முறை செயல்படுத்தப்பட்டது. இப்போது முதல் முறையாக உலக கிண்ணத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. யுடி.ஆர்.எஸ் முறைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. |
வியாழன், 3 பிப்ரவரி, 2011
உலக கிண்ண போட்டிகளில் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை, சூப்பர் ஓவர் அறிமுகம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)