
ஐதராபாத்: செஸ் சாகசம் நிகழ்த்த காத்திருக்கிறார் "உலக சாம்பியன்' விஸ்வநாதன் ஆனந்த். ஒரே சமயத்தில் 40 வீரர்களுடன் விளையாட உள்ளார். ஐதராபாத்தில் சர்வதேச அளவிலான கணித நிபுணர்களின் கூட்டம் நேற்று துவங்கியது.
இதனை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார். இதில், இந்தியாவின் "கிராண்ட்மாஸ்டர்' ஆனந்த் பங்கேற்கும் சிறப்பு செஸ் போட்டி வரும் 24ம் தேதி நடத்தப்பட உள்ளது. கணிதம் மற்றும் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவர், ஒரே சமயத்தில் 40 வீரர்களுடன் விளையாட இருக்கிறார்.
இது குறித்து போட்டி அமைப்பாளர் ஒருவர் கூறுகையில்,""ஆனந்துடன் விளையாட மிகச் சிறந்த 40 பேரை தேர்வு செய்துள்ளோம். இதில், இந்தியாவை சேர்ந்த கணித பேராசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்,''என்றார்